Friday, March 25, 2011

திருவிதாங்கோடு பள்ளி (கமாலுத்தீன் மதனி விளக்கம்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். திருவிதாங்கோடு விஷயமாக ஆன்லைன் பீஜெ-யை பார்த்து பதில் தருமாறு கேட்டிருந்தீர்கள் ....

அதை நான் பார்ப்பது கிடையாது. நீங்கள் விளக்கம் கேட்டதற்காக இன்று அதனைப் பார்த்தேன். இது சம்மந்தமாக சில சகோதரர்கள் பதில் கொடுத்துவிட்டார்கள். என்னிடத்தில் இது குறித்துக் கேட்டவர்களிடத்தில் உண்மையை தெளிவுபடுத்திவிட்டேன். திருவிதாங்கோட்டில் புதிதாகக் கட்டப்பட்ட இவர்கள் குறிப்பிட்டுள்ள முஹைதீன் பள்ளி 1966 திறக்கப்பட்டது. அப்போது நான் பள்ளி வளாகத்தில் உள்ள மத்ரஸாவில் பயின்று கொண்டுயிருந்தேன். அப்போது என்னுடைய வயது 15.
திருவிதாங்கோட்டில் இதுவரை தவ்ஹீது பள்ளிவாசல் எதுவும் கட்டப்படவில்லை திருவிதாங்கோட்டில் தவ்ஹீது பள்ளி கட்ட நான் சவூதியிலிருந்து உதவி பெற்றக்கொடுத்தேன் என்று கூறியது பகிரங்கப் பொய், அவதூறு.
திருவிதாங்கோட்டில் உள்ள எந்த பள்ளிவாசலுக்கும் எந்த அரசாங்கத்திடமிருந்தும் என்னுடைய பரிந்துரையின்பேரில் பணம் பெற்றுக்கொடுக்கவில்லை.
சவூதி அரசாங்கம் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு மட்டும்தான் உதவி வழங்கும் என்பது தவறு.
திருவிதாங்கோட்டில் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதியுடன் பிரச்சாரம் செய்தது 1986 (JAQH துவங்கப்படவில்லை) அப்போது பள்ளிவசால் கட்டுவதற்கு நான் உதவியதை அவர் சுட்டிக்காட்டியதாகவும் கண்டித்ததாகவும் குறிப்பிட்டிருப்பது உண்மைக்கு மாற்றமானது.
மதனிகளின் பரிந்துரையின் மூலம் மட்டும் தான் வஹ்ஹாபிகளின் உதவியை பெறமுடியும் என்று கூறுவது இவர்களது அறியாமையைக் காட்டுகின்றது.
ஷிர்க் நிறுவனத்தை தவ்ஹீத் நிறுவனம் என்று சவூதியை ஏமாற்றியது யார் என்பதை இவர்கள் தக்க ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டும், தவறினால் இவர்கள் மாபெரும் பொய்யர்கள் என்பதை இவர்களை கண்மூடி பின்பற்றுகின்றவர்கள் புரிந்துகொள்ளட்டும்.
இவர்கள் இடம்பெறச்செய்திருக்கும் கல்வெட்டு பள்ளிவாசலுக்குரியதல்ல அரபிக்கல்லூரி கட்டிடத்திற்கான கல்வெட்டு 1977ல் திறக்கப்பட்டது.
எந்த பள்ளிவாசலை இவர்கள் குறிப்பிட்டுள்ளார்களோ அந்த பள்ளிவாசல் நிர்வாகிகளை அணுகி யாருடைய முயற்சியால் உதவி கிடைத்தது என்று கேட்டால் உண்மை தெரிந்து விடும்.
திருவிதாங்கோட்டு மதரஸாவில் நான் பட்டம் பெற்றேன் என்று குறிப்பிட்டிருப்பது பொய்.
தவறுதலாகச்சொல்லிவிட்டேன் என்று சொல்வதை விட்டுவிட்டு ஒரு பொய்யை நியாயப்படுத்த பல பொய் சொல்கிறார்கள்.
வாயில் பூட்டுபோடப்படும் மறுமை நாளில் எல்லா உண்மைகளும் வெளிவரும்.
எஸ். கமாலுத்தீன் மதனி



                                                                                                                    
                                                                                                              
                                                                                                         நன்றி
                                                                                               JAQH  வெப்சைட்

Thursday, March 24, 2011

சத்தியத்தை உயர்த்தி பிடிக்கும் TNTJ

 
அல்லாஹ்வின் திருநாமத்தால்........
நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினை இருக்கிறது'50:35.

அன்புச் சகோதரரே! பல சகோதரர்களின் உருவப்படங்களுடன் எனது உருவப் படத்தையும் இணைத்து நீங்கள் தொகுத்த ஒரு ஆக்கம் கண்டேன். அதைக் கண்டபோது அதைத் தொகுத்த நீங்கள் தவ்ஹீதில் அக்கறை உள்ளவர் என்பதும், அதே நேரம் நீங்கள் தமிழகத்தில் தவ்ஹீத் உருவான, உருவாகி வளர்ந்த வரலாறு தெரியாதவர் என்பதும் பளிச்சென தெரிந்து விட்டது. எனவே உங்களைப் போன்று தமிழகத்தில் தவ்ஹீத் உருவான வரலாறு தெரியாமலேயே செயல்படும் பல இளைஞர்கள் உண்மையைப் புரிந்து உரிய பலனைப் பெற வேண்டுமென்ற நன் நோக்கில் மேற் குறிப்பிட்டிருக்கும் இறைவாக்கிற்கொப்ப இதனை அறியத் தருகிறேன். யா அல்லாஹ்! சத்தியத்தை சத்தியமாகக் காட்டி அதனை பின் பற்றும் பாக்கியத்தையும் அசத் தியத்தை அசத்தியமாகக் காட்டி அதனை தவிர்ந்து கொள்ளும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

அன்புச் சகோதரரே! தமிழகத்தில் குர்ஆனும் ஹதீசும்தான் மார்க்கம் அவ்விரண்டிற்கும் மாற்றமானவை மார்க்கமற்றவை என்பதை நமது நாட்டில் துவங்கி பல இடையூறுகளை அனுபவித்து அல்லாஹ்வின் மா பெரும் அருளால் அது வளர ஆரம்பித்ததும் தமிழகத்தில் பல பகுதிகளில் பல்வேறு பெயர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பல அமைப்பின் சகோதரர்கள் திருச்சியில் 1986 களில் கூடிய ஒருசமயத்தில் எல்லோர் உள் ளத்திலும் ஒரே பெயரில் நாம் இயங்கினால் நன்றாக இருக்குமே என்று எண்ணியபோது நிறுவப்பட்ட அமைப் புதான் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன், வல்ஹதீஸ்., அன்றைக்கு அந்த சிந்தனையைப் பரப்புவதில் அதிகப் பங்கு வகித்தவர்களில் முக்கியமாக இருந்த உங்களின் தலைவர் தான் அப்போதைக்கு முதலாவதாக தற் காலிகத் தலைவராக இருந்தார் அதன் பின்னர் கூடிய கூட்டத்தில் தான் உங்களின் தலைவரும் சேர்ந்து இவ்வமைப்பிற்கு தற்போது இருந்து வரும் கமாலுத்தீன் மதனி தலைவராக்கப்பட்டார்.

அன்று உருவாகப் பட்ட அமைப்பில் அங்கம் வகித்த நான் அன்றிலிருந்து இன்று வரை அல்லாஹ்வின் பேரருளால் அதே கொள்கையில் அதே தலைமையில் அதே அமைப்பில் இருந்து செயல்பட்டு வருகிறேன். அல்லாஹ் இதே நிலையில் என்னை இறுதி வரை வாழ வைத்து ஈமானுடன் உண்மை முஸ்லிமாக மரணிக்கச் செய்ய வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டுமிருக்கிறேன். ஒரே அமைப்பில் இருக்கிறேன் என்று சொல்வதால் உங்கள் தலைமையை கண்மூடித்தனமாக உங்களைப் போன்றவர்கள் பின்பற்றுவது போல என்று எண்ணி விடக்கூடாது. மாறாக, அல்ஹம்து லில்லாஹ் தலைமையில் காணுகின்ற குறைகளை அன்றும் இங்கு வரு வதற்கு சில தினங்களுக்கு முன்பும் கூட தயவுதாட்சண்யமின்றி சுட்டிக் காட்டித்தான் வந்திருக்கிறேன்., அல்ஹம்துலில்லாஹ் எங்களது தலைவர் உங்களின் தலைவர் போன்றில்லாமல் தவறை உணர்த்தப்பட்டால் உடனே மன்னிப்புக் கேட்கும் தலைவர். அச்சுபாவம் உங்களின் தலைவருக்கு இல்லாததால் தான் அமைப்பு அமைப்பாக தலைவர் தலைவராகத் தாவிச் சென்று இறுதியில்-- நான் எந்த அமைப்பிலும் கேள் விப்படாத தலைவரை உதவித் தலைராக்கிவிட்டு--தானே தலைவராகிவிட்டார்.

உங்களின் தலைவர் பகிரங் கமாகக் கூறிய பொய்ச் செய்தியைச் சுட்டிக்காட்டியபோதும் கூட அதை ஏற்காதவர். மட்டுமின்றி நாங்கள் ஒரே தலைமையின் கீழிருந்த காலத்தில் நான் சுட்டக்காட்டிய அளவிற்கு உங்கள் தலைவர் சுட்டிக் காட்ட வில்லை --அவருக்கு தலைமையின் மூலம் இலாபமிருந்தது-- மட்டுமின்றி தனது கருத்தைத்தான் தலைவர் செய்ய நிர்ப்பந்திப்பார்.

விஷயத்திற்கு வருவோம்;.

எனது படத்தைப் போட்டுவிட்டு எனது பெயரைக் குறிப்பிடாமல் ...குராஃபாத் அமைப்புகளில் பைஅத் செய்து கொண்டதாகவும் ஏகத்துவத்தைக் கை கழுவி விட்டதாகவும் எழுதியிருந்ததைப் பார்த்ததும் உங்களின் மீது அனுதாபம்தான் எனக்கு ஏற்பட்டது. ஹைர்! அல்லாஹ்வே சாட்சி! அல்லாஹ்வே போது மானவன்! நீங்கள் கூறியதை சாட்சியோடு இன்னவரிடம் பைஅத் செய்துள்ளார், இன்ன இடத்தில் தவ்ஹீ துக்கு மாற்றமாக பேசியுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தால் நீங்கள் ஒரு தெளிவான தவ்ஹீத்வாதி என ஏற்றுக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு நம்மைச் சுற்றி என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ள ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது என்ற மதமதப்பில் உங்கள் தலைவர் போல பல செய்திகளை அடித்துவிட்டிருக்கிறீர்கள்.



நினைவுக்கு வந்த சிலவற்றைத் தருகிறேன், படியுங்கள் சிந்தியுங்கள், திருந்துங்கள், திருத்துங்கள்.நான் குறிப்பிட்டவற்றில் தவறு கண்டால் சுட்டிக் காட்டுங்கள், ஆதாரத்துடன் தவறை சுட்டிக்காட்டுபவருக்கு நன்றி கூறி திருத்திக் கொள்வேன். இவையெல்லாம் சுட்டிக் காட்டுவதன் நோக்கமே தவறு செய்தவர்கள், செய்ப வர்கள் திருந்த வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான். தவறெனத் தெரிந்ததும் திருந்துபவர், திருத்திக் கொள்பவர், திருத்த முயற்சி செய்பவர் ஆகிய அனைவரும் இறையன்பைப் பெறும் தகுதிக்குரியவர், தவறைத் திருத்திக் கொள்ளாமல் நியாயப்படுத்த நினைப்பவர் ஷைத்தானின் அடிமைகள். யா! அல்லாஹ் ஏகத்துவ வாதிகளை உன் அன்பைப் பெறத் தகுதியானவர்காக ஆக்கி அருள்வாயாக!.

நீங்கள் உங்களின் ஆக்கத்தில் கூறியிருக்கிற குற்றச்சாட்டுகள் உங்கள் தலைவரைத்தான் என்பதை நீங் களே நான் தருகின்ற ஆக்கங்கள் மூலம் புரிந்துகொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.

உங்களின் தலைவர் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சத்தியத்தைக் கூறுவதெற்கென்றே தமிழகத்தில் உருவாக்காப்பட்ட அமைப்பிலிருந்து தடம்புரண்டு வேறு அமைப்பில் பைஅத்துச் செய்து கொண்ட பின் அவரின் முரண்பாடுகளில் சில:


ஏகத்துவ மேடைகளில் (நான் ஏகத்துவ மேடை என்று குறிப்பிடுவது 1986 களில் தமிழகத்தில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உருவாகப்பட்ட அமைப்பு) தர்க்காவிற்கு செல்வது அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன், நிரந்தர நரகம், அப்படிச் செய்பவர் முஷ்ரிக், காஃபிர் இத்தகையவர்களிடம் சமரசம் செய்து கொள்வதற்கு இடமே இல்லை என்று அழுத்தம் திருத்தமாகப் பேசிய அதே நாக்கு, முஸ்லிம் என்ற பெயர் உள்ள எல்லோரும் வாருங்கள் நீங்கள் எந்தக் கொள்கையில் இருந்தாலும் பரவாயில்லை, உங்களுக்காக குரல் கொடுப்ப தற்கே அமைப்பை உருவாக்கப்பட்டிருக்கிறது, இது தவ்ஹீதைக் கூறாது எனக் கூறி அந்த அமைப்பின் தலைவரிடம் பெயருக்கு பைஅத் செய்து அமைப்பாளராகி, தவைலரும் தனது கருத்தையே பிரதிபலிக்க வேண்டுமென்று அங்கிருந்து விலகும் வரை நிர்பந்தித்து கொண்டிருந்தவர்தான் உங்கள் தலைவர்.
  • அந்த மேடையில் எங்கள் தர்காவிற்கு பஸ் விடு என்று முழங்கினார். பித்அத்கள் நரகத்திற்கு இட்டுச் செல்லு மென முழங்கிய அதே குரலிலல் எங்கள் ஹஸரத்தைக் கூப்பிட்டு ஃபாத்திஹா ஓதச் செய் என்றும் முழங் கினார்-சத்தியம் அவர் உள்ளத் தில் இருந்ததால் பேசியபோதே நினைவு வந்தவுடன் தர்கா கூடுமா? கூடாதா என்பது வேறு என்றும் சொல்லிக் கொண்டார்- அரசியலுக்கு ஒரு தலைமை ஆன்மீகத்திற்கு ஒரு தலைவர் என்று முஸ்லிம் சமு தாயம் சென்றதால்தான் சமுதாயம் சீரழிந்து போய்விட்டது என்று பேசிய அதே குரல் தான் அரசியலுக் கும் ஒரு அமைப்புத் தேவை என்று அமைப்பாளரானார்.
  • அமைப்பாளரானதும் தவ்ஹீத் மேடைகளில் முஸ் லிம்களின் பின்னடைவுக்கு ஆலிம்களே காரணம், ஏனெனில் இவர்கள் ஆங்கிலேயனின் மீது கொண்ட வெறுப்பால் இங்லீஸ் படிக்ககக் கூடாது என்றனர், பேண்ட் போடக்கூடாது என்றனர் என்று முழங்கினார், அதே குரலில் தவ்ஹீத் அல்லாததைச் சொல்வதற்காக பைஅத் செய்து கொண்ட மேடையில் முழங்கும் போது –சுப்ஹானல்லாஹ் நரம்பில்லா நாக்கு என்பார்களே அதை அப்படியே மெய்ப்பிக்கும் விதமாக- நமது ஆலிம்கள் எப்படிப்பட்ட தியாகிகள் தெரியுமா? (தேச பக்திக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பதைத் தவ்ஹீத் மேடையில் ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாகப் பேசியவர்)தேசபக்தியின் காரண மாக ஆங்கிலம் படிப்பது ஹராமென்றார்கள், பேண்ட் அணியக்கூடாது என்றனர் என்று முழங்கினார் முரண்பட்டுப் பேசுகிறாறே என்று ஆட்சேபிக்க வேண்டிய உங்களைப் போன்ற தவ்ஹீத் வரலாறு தெரியாத வர்கள் அப்போதும் நாரே தக்பீர் அல்லாஹுஅக்பர் என்று முழங்கினார்கள்.
  • உங்கள் ஓட்டு யாருக்கு என்ற தலைப்பில் எல்லா அரசியல்வாதிகளையும் அலசி எவருக்கும் ஓட்டுப் போடக்கூடாது என்று பேசிய அதே வேகத்தில் எந்த அரசியல்வாதியும் செய்யாத ஒன்றை-- அதாவது ஒரு முறை திமுக, அடுத்து அதிமுக, அதையடுத்து சில பகுதிகளில் திமுக, சில பகுதிகளில் அதிமுகவை ஆதரிக்கிறோம் என்று -தடுமாற்றத்தையே வாடிக்கையாகக் கொண்டவர் தான் நீங்கள் சார்ந்திருக்கும் அமைப்பின் தலைவர். மட்டுமா! ஜெயலலிதாவை மிகக் கடுமையாக கேவலமானவர் என்று ஆதார அடிப் படைகளுடன் விமர்சனம் செய்து உணர்விலும் எழுதி, மேடைகளிலும் பேசிவிட்டு அம்மையாரை முத லமைச்சாருக்குங்கள் என்று ஊர் ஊராகச் சென்று ஓட்டு வேட்டை நடத்தினார், அவரின் தலைமை யின் கீழுள்ள சிலர் அம்மாவின் ஆட்சியில் முஸ்லிம்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என்றாகள்.
  • தவ்ஹீத் (தமிழ் நாடு தவ்ஹீதல்ல) மேடையில் பெண்களிடம் ஆட்சியை ஒப்படைப்பவர்கள் மண்ணுக்கு மேல் வாழ்வதை விட மண்ணுக்கடியில் வாழ்வதே சிறந்தது என்ற ஹதீஸை அற்புதமாக எடுத்துரைத்த மாமேதை தான் உங்களின் தலைவர்.
  • ஜம்மியத் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பின் தற்காலிகத் தலைவராக இருந்து பின்னர் அவரும் இணைந்து இவ்வமைப்பிற்கு கமாலுத்தீன் மதனியை தலைவராகத் தேர்வு செய்து, அது வளர ஆரம்பித்த கட்டத்தில் தலைவரின் மீது பலரும் பல குற்றச் சாட்டுகளைக் கூற தலைவர் தனது தலைமைத் தனத்திலிருந்த விலகிக் கொள்கிறேன் என்று வந்தபோது இஸ்லாத்தில் தலைமையை மாற்ற இடமேயில்லை மரணிக்கும் வரை அவர்தான் தலைவர் என்றும் அதற்கு நானே அவரிடம் முதன்மையாக பைஅத் செய்கிறேன் என்றும் கூறினார். பின்னர் அதிகாரமுள்ள தலைவர் அதிகாரமற்ற தலைவர் என்ற தத்துவத்தை முன் வைத்து தமிழ் முஸ்லிம்களுக்கு ஆன்மீகத்திற்குத் தலைவர் ஒருவர் கிடையாது என்று இரண்டாம் முறையாக அவர் பைஅத் செய்து கொண்ட மேடைகளில் பேசினார், எழுதினார்.
  • இன்றைக்குத் தமிழகத்தில் சமுதாயப் பணிகள் செய்வதற்கு முஸ்லிம்கள் நம்பிச் செயல்பட, உதவிகள் செய்ய மிகத் தகுதியான அமைப்பு தமுமுக, மார்க்கப்பணிகள் செய்திட நம்பி உதவி செய்யத் தகுதியான அமைப்பு ஹாமித் பக்ரியின் தலைமையில் இயங்கும் அனைத்துத் தவ்ஹீத் ஜமாஅத் என்று என்று மனம் திறந்து மடல் என்று மடலை-- தமிழகம் அவருடைய பேச்சைக் கேட்டுத்தான் எதுவும் செய்கிறது என்பது போல—உணர்வில் எழுதினார், சுப்ஹானல்லாஹ் எழுதிய சில மாதங்களிலேயே வஹி வந்தவர்போல தமுமுக தவ்ஹீத் வாசலை அடைத்துவிடக்கூடிய அமைப்பு, ஹாமித் பக்ரிக்கு தீவிர வாதிகளுடன் தொடர்பு இருக்கின்றது என்றார், சுப்ஹானல்லாஹ் சுப்ஹானல்லாஹ் சுப்ஹானல்லாஹ் கண்மூடித் தனமாக பின்பற்றும் தன்மையை ஒழிக்க வேண்டுமென முழங்கிய அவரே அத்தகைய கூட்டத்தின் தலைவராக மாறியிருக்கிறார்.



அல்லாஹ்வின் கிருபையால் தமுமுக அவர் வெளியே வந்த பின்னர் தமுமுக மேடையிலேயே தவ்ஹீதை பகிரங்கமாக முழங்கும் நல்ல சூழலுக்கு மாறியுள்ளது, பல நல்லவர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும் அமைப்பாகவும் மாறியுள்ளது அல்ஹம்து லில்லாஹ்.
  • மா மனிதர் என்று ஒரு தலைப்பில் மிக அழகாக (ஸல்)அவர்களைப் பற்றி பல காலமாகப் பேசியிருக்கி றார். அதில் ஒரு முறை மாமனிதர் (ஸல்)அவர்கள் சபையில் இருக்கும்போது அவர்களைத் தேடி வருபவர்கள் முஹம்மத் யார் எனக் கேட்குமளவிற்கு மக்களோடு மக்களாக அமர்ந்திருப்பார்கள் என்ற உண்மையை அழகாக அழுத்தமாக எடுத்துச் சொன்னவர் உங்களின் தலைவர் இன்று வரை அவரை யாராவது பார்க்கச் சென்றால் நேரடியாகச் செல்ல முடியாது, ஏன் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கூட நேரடியாக தொடர்பு கொள்ள இயலாது, சபையில் மக்களோடு மக்களாகப் பார்க்கவே முடியாது.
  • உங்களின் தலைவர், மா மனிதர் இடம், நேரம், காலத்திற்குத் தகுந்தாற்போல உங்களைப் போன்ற தம்பிகள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு பேசுவதில் அவருக்கு நிகர் அவரே. சிறந்த அறிவாளி ஆனால் அறிவாளிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் அற்றவர்.



ஒவ்வொரு அமைப்பை விட்டும் வெளியேறும்போது ஏதேனும் நொண்டிக் காரணங்களை தூய எண்ண முள்ளவர்கள் கூறுவதுபோல கூறிவிட்டு சென்ற பின்னர் தான் சார்ந்திருந்த காலங்களிலெல்லாம் அவர்க ளுடன் கைகோர்த்து எல்லாக் காரியங்களையும் செய்து விட்டு அல்ல அல்ல தனது சர்வாதிகாரத்தால் செய்ய வைத்துவிட்டு இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளைக் கூறுவார் உங்களைப் போன்ற புகழ் பாடும் கூட்டமிருப்பதால்! எந்த அளவிற்கென்றால் அல்லாஹ்வும் ரசூலும் வண்மையாக மிக மோசமான கெட்டவை என்று கண்டித்துக் கூறியதை அவரது கட்டுப்பாட்டிற்கு கீழிருந்த இருக்கிறவர்களில் இருவரை ஊர் ஊராக அனுப்பி குற்றங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து வீடியோவில் பதிவு செய்து அதைப் பார்க்கச் செய்து பலரை பெரும் பாவம் செய்ய வைத்தவர்.


சுருங்கச் சொல்வதாயிருந்தால் தமிழகத்தில் -- இவரும் இணைந்திருந்த காலத்தில்--ஏகத்துவத்தை உருவாக்க இன்று வரை கஷ்ட, நஷ்டங்கள் பட்டுக் கொண்டிருப்பவர்களையும் அவர்கள் நடத்தப்பட்டு வரும் இதழ்கள், அழைப்பு மையங்கள், கல்லூரிகளை இழித்தும் பழித்தும் கூறிக் கொண்டிருக்கிறார்.

இவையெல்லாம் சரிதானே என்று உங்களைப் போன்ற ஒரு கூட்டமும் சேர்ந்து கொண்டு செய்கிறது. மிகத் துணிவாக பொய்களைக் கலந்து சேற்றை வாரி வீசுவதற்கு முக்கியக் காரணம் தற்போது அவர் பின்னாலிருக்கும் கூட்டம் உங்களைப் போன்ற தவ்ஹீதின் உருவாக்கத்தைத் தெரியாதவர்கள் என்பதுதான். நினைவுக்கு வந்த சிலவற்றைக் கூறியுள்ளேன், இதுவும் அவரின் குறைகளை அலச அல்ல. மாறாக உங்களைப் போன்று தவ்ஹீதை தவ்ஹீதுவாதிகள் மூலம் பெறாமல் செய்திச் சாதனங்கள் மூலமாக மடடும் தெரிந்து கொண்டு, தெரிந்த கொண்ட ஆர்வக் கோளாறுகளால் தலைவரைப் போன்றே உங்களைப் போன்றவர்கள் இறங்கிவிடுகிறார்கள், தெரிந்ததைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இவற்றை அறியத் தருகிறேன், நீங்கள் அவரை விட்டு வெளியேறிவிடுவீர்கள் என்ற எண்ணத்தில் அல்ல எடுத்துச் சொல்வது மட்டுமே அல்லாஹ் இட்ட கட்டளை!.

ஆரம்ப காலங்களில் தவ்ஹீதை பரவச் செய்ய பொருளால், அறிவால் இன்னும் பல வழிகளில் பாடுபட்ட பல நல்லவர்களை உங்கள் தலைவர் பகைத்துக் கொண்டு வரலாறு தெரியாத புதியவர்களோடு இணைந்திருக்கிறார்., பழையவர்களோடு இருந்தால்தான் குறை நிறைகளை தெரிந்து தன்னைச் சரிப்படுத்திக் கொள்ள முடியும், ஒருவேளை குறைகளே தெரியக்கூடாது என்று எண்ணுகிறாரோ என்னவோ! அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.


உங்களின் தலைவருக்கு உங்கள் மூலமாக இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னர் அதிலிருந்து பிரிந்து போவதற்கு தகுதியான காரணமின்றி பிரிந்து போவது மாபெரும் குற்றம் என பல சந்தர்ப்பங்களில் பேச்சுக்களின் மூலமும் எழுத்துக்கள் மூலமும் தெரிவித்திருக்கிறேன். இப்போதும் அதையேத் தெரிவித்துக் கொண்டு மற்றொன்றையும் சேர்த்து சொல்லிக் கொள்கிறேன்.
சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னர் அதிலிருந்து பிரிந்து போவதற்கு தகுதியான காரணமின்றி பிரிந்து போவது மாபெரும் குற்றம் என்ற தலைப்பிலும், மற்றும் உலகம் முழுவதற்கும் பிறை ஒன்றே என்ற இந்த இரு தலைப்புளையும் பற்றி நீங்கள் விரிவாக அலசுவதற்குத் தயாரா? நாம் எப்போதும் தயார்.


இதையெல்லாம் இன்ஷா அல்லாஹ் நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லத் தயார் பல சமயம் இவற்றில் பலவற்றை தபால் மூலமும் உங்களின் தலைவருக்குத் தெரிவித்திருக்கிறேன்.

உங்களின் தலைவர் பழைய நிலைக்கு வரவேண்டி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் என்றும் நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்---ஒருவேளை உங்களின் தலைவர் பழைய நிலைக்கு வந்துவிட்டால் அவரோடு கைகோர்த்து முந்தைய காலங்களைப் போன்று பணி செய்யவும் காத்திருக்கிறேன்-- அல்லாஹ் போதுமானவன்.
அவனே காரியங்களை நம்பி ஒப்படைப்பதற்கு மிகத் தகுதியானவன், மிக்க நல்லவன், யா அல்லாஹ் உள்ளங்களில் உணர்வுகளை அறிந்தவனே! உள்ளங்களை விரல்களுக்கிடையில் வைத்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பவனே! எந்தெந்த உள்ளங்களை ஈடு இணையற்ற உனது தவ்ஹீதைப் படிக்க பரப்ப தேர்ந்தெடுத்தாயோ அந்த உள்ளங்களை ஓரணியில் இணைப்பாயாக! உனது திருப் பொருத்தைத்தை மட்டுமே நாடி உனது பணியினை மேற்கொண்டு உண்மை முஸ்லிமாக வாழ்ந்து உண்மை முஸ்லிமாக மரணித்து முடிவே இல்லா நிரந்தர இன்ப பாக்கியங்கள் நிறைந்த சுவனபதியில் நலலோர்களுடன் இருக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக! ஆமின் ஆமின் யா ரப்பல் ஆலமீன்.
கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி
அல்கோபர்
சவுதி அரேபியா

பள்ளிகளை பாதுகாக்கும் TNTJ


“உன் பெயர் என்னவென்று கேட்டால் அந்தா ஆட்டுக்குட்டி என்றும் தொன்டிக்கு வழி சொல்லு என்று கூறினால் நான் அல்வா திங்கவே இல்லை என்றும் கூறுவது போல..”
முக்கிய அறிவிப்பு : தலைமறைவான தென்காசி பட்டனத்தான் அவர்களுக்கு, இங்கு ஆட்டம் ஓவராகிவிட்டதால் உங்கள் உதவி தேவைப்படுகின்றது எங்கிருந்தாலும் என்னை தொடர்பு கொள்ளவும். வரும்போது கையில்விளக்குமாறும் வேப்பங்கொளயும் கொண்டு வரவும். (யோவ்..எங்கய்யா போன ? அடலீஸ்ட் கொஞ்சம் சப்போர்ட் பன்னுய்யா..ஒத்த ஆளா எத்தன பேத்த சமாளிக்கிறது?)
கடையநல்லூர் பள்ளி யாருக்கு சொந்தம்? என்ற தலைப்பிட்டு ஏவி விடப்பட்ட ததஜ வின் அஹமது அலி என்பவர் எழுதுகையில்,
Please click over every picture to view it bigger
“கடையநல்லூர் முபாரக் பள்ளிவாசல் அந்த பகுதியை சேர்ந்த தவ்ஹித் சகோதரர்களின் உழைப்பால் உறுவானது. அது எந்த அமைப்புக்கும் சேராது அது அந்த பகுதி மக்களுக்கு சொந்தமானது என்றுதான் இதுவரை ததஜவினர் கூறியும்இ எழுதியும் வருகிறார்கள். ஆனால் மூலை கழுவி விடப்பட்ட இந்த கோமாளி அந்த பள்ளி ததஜவுக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறார்கள் என்று பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளார். அப்படி ததஜ எங்கெயாவது அந்த பள்ளி தங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறியதாக நிறுபிக்க முடியுமா?-ததஜ வின் அஹமது அலி
என்று எழுதியுள்ளர். இதில் இருந்து நமக்கு புலனாக கூடியவை இரண்டு விஷயங்கள்.
1. பள்ளி ததஜ வினருக்கு சொந்தமில்லையென்று அவர்களாக ஒத்துக்கொள்கின்றார்கள்.
2. பள்ளி ததஜ விற்கு சொந்தமென்று ததஜ வினர் எங்காவது கூறியதாக நிருபிக்க முடியுமா என்று கேட்டுள்ளார்கள்.
முதலில் பள்ளி ததஜ வினருக்கு சொந்தமில்லை என்று ஒத்துக்கொண்டமைக்கு நன்றி ததஜ வினர் ஒருபோதும் பள்ளிக்கு உரிமை கொண்டாடவில்லை என்று கூறியுள்ளதற்கு எங்கள் விளக்கம்.
பள்ளி ததஜ விற்கு சொந்தமில்லை என்றும் கூறுகின்றீர்கள் ததஜ வினர் பள்ளிக்கு ஒருபோதும் உரிமை கொண்டாட வில்லை என்றும் கூறுகின்றீர்கள் ஆனால் அதே சமயத்தில் அழைப்பு பணிக்காக வசூல் செய்யப்பட்ட பணத்தினை கொண்டு வேன் வேனாக ஆட்களை பள்ளிக்கு கொண்டு சென்று இறக்குகின்றீர்கள். ததஜ வின் பத்திரிகை அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றில் ததஜ விற்கு தொடர்பு இல்லாத பள்ளி பற்றி வேறு யாரோ இரு குழுக்களுக்கிடையில் நடந்த பிரச்சினையை இவ்ளவுதூரம் உணர்ச்சி வசப்பட்டு சித்தறித்து எழுதுவது ஏன்?
ததஜ விற்கும் பள்ளிக்கும் சம்பந்தம் இல்லையென்றால் , ததஜ பள்ளியில் உரிமை கோர வில்லை என்றால் ததஜ வின் மாநில செயளாலர் கிரிமினல் சைபுல்லா ஹாஜா அவர்களும் மாநில நிர்வாகிகளும் இதற்காக ததஜ வின் பணத்தினை செலவு செய்து உழைப்பது ஏன்? வெற்றி!! வெற்றி!! ஏன்று கூவுவது ஏன்? இத்தனை ஆர்ப்பாட்டமும் ஏன்?
உங்களுக்கு சம்பந்தமில்லை என்றால் பின்னர் நீஙகள் ஏன் இதில் தலையிடுகின்றீர்கள்? பள்ளியை என்ன இந்து வெறியர்களா கைப்பற்ற போகிறார்கள். இரு வேறுபட்ட முஸ்லிம் குழுக்கலுக்குள் பிரச்சினை அவர்கள் அதை தீர்த்து கொள்வார்கள் என்று விட்டு விட வேண்டியது தானே? வலைகுடா வாழ் தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் அழைப்ப பணிக்காக அளித்த பணத்தினை கொண்டு இதற்கு செலவு செய்வது ஏன்?
சரி அதை விட்டு விடுவோம் மேட்டருக்கு வருவோம் , ததஜ ஒரு போதும் பள்ளி ததஜவிற்கு சொந்தம் என்று கூறியதில்லை ஆனால் பள்ளி ததஜ விற்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறார்கள் என்று பொய்யான செய்தியை முகவைத்தமிழன் வெளியிட்டுள்ளார் அப்படி ததஜ அந்த பள்ளி தங்களுக்கு சொந்தம் என்று எங்காவது கூறியதாக நிருபிக்க முடியுமா என்று சவால் விட்டிருந்தார் ததஜவின் விசிலடிச்சான் குஞ்சு கிரிமினல்அஹமது அலி என்பவர்.
மேலே உள்ள மின்னஞ்சலில் ததஜவின் அடுத்த விசிலடிச்சான் குஞ்சு துபை நிஜாம் மைதீன் என்பவர் எழுதியுள்ளதை படிக்கவும் :
“இறைவனின் கிருபையால் கடையநல்லூர் முபாரக் பள்ளி அரசு ஆனைப்படி தவ்ஹித் ஜமாத்திடம் ஒப்படைப்பு இன்று மக்ரிப் முதல் தொழுகை ஆரம்பம்”
என்று எழுதியுள்ளார். இதற்கு என்ன அர்த்தம்? ததஜ வின் விசிலடிச்சான் குஞ்சுகளே விளக்குவீர்களா? நீங்கள்தான் கிரிமினல்கள் (புத்திசாளிகள்) ஆச்சே!!
கீழே உள்ளது ததஜ வின் அதிகாரப்பூர்வ இணையத்தில் அவுத்து விட்ட பிளாஸ் நியுஸ்.
“மாவட்ட வக்பு தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில் ஜாக்இ தமுமுக வினரின் அராஜகத்தால் மூடப்பட்ட கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் (23.08.2006) மாலை 5.45 மணிக்குத் திறக்கப்பட்டது ! மக்ரிப் முதல் தொழுகை ஆரம்பமானது அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே! -tntj.net

“மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசலை மீண்டும் மூட ஜாக், தமுமுக கும்பல் முயற்சி முறியடிப்பு
ஏகத்துவக் கொள்கை வளர்ச்சியடைந்த ஊர்களில் ஒன்றுதான் நெல்லை மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் ஆகும். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 1982 ம் வருடம் சகோதரர் எம். அப்துல் ஜலீல் மதனீ அவர்களின் தலைமையில் விதைக்கப்பட்ட ஏகத்துவம் என்ற விதை தழைத்து கடையநல்லூரைச் சுற்றிலும் தென்காசி, வடகரை, அச்சன் புதூர், வாவா நகரம், ஆலங்குளம், புளியங்குடி, வாசுதேவநல்லூர், வீராணம், வல்லம், பொட்டல் புதூர், தாழையூத்து, இன்னும் பற்பல ஊர்களில் சத்திய ஒளி பாய்ச்சிக் கொண்டிருக்கின்றது. இறையுதவிக்கு அடுத்த படியாக கடையநல்லூரைச் சார்ந்த தவ்ஹீத்வாதிகளின் மாபெரும் தியாகத்தினாலும், நல்லுள்ளம் கொண்டோர்களின் உதவியினாலும் 1995ம் வருடம் பல்வேறு…-tntj.net

இதற்கு என்ன அர்த்தம்? துதஜ வின் விசிலடிச்சான் குஞ்சுகளே விளக்குவீர்களா? நீங்கள்தான் கிரிமினல்கள் (புத்திசாளிகள்) ஆச்சே!!
தீன்முஹம்மது என்ற ததஜவின் அவிழ்த்து விடப்பட்டதின் பொய்யை மக்கள் உணர்ந்து சொல்லடிபட்டு கேவலப்படுத்தப்பட்டு செத்ததால் அடுத்ததாக அவிழ்த்து விடப்பட்ட அஹமது அலி என்பது எழுதுகையில் :
“நேற்று மக்ரிப் இஷா இன்று பஜர் ளுஹர் அசர் என்று தொடர்சியாக தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்த சகோதரர்களே இமாமாக இருந்து தொழுகை வைத்துள்ளனர். பள்ளியின் பொருப்பும் அவர்களிடமே உள்ளது. ஆனால் ளுஹரையும்இ அசரையும் தமுமுகவைச் சேர்ந்தவர்கள் தொழவைப்பார்கள் என்று பொய்யுரைத்த இந்த ரயிசுதீனுடைய ஒரு பொய்யன் என்பது மீண்டும் அம்பலமானது. ஒரு பள்ளிவாசல் விசயத்திலேயே தனது கற்பனைகளை அளந்து விட்ட இந்த நபர் ததஜ சகோ.பிஜெ சம்மந்தப்பட்ட செய்திகளில் என்னெல்லாம் பொய்யுரைத்து இருப்பார் என்பதை சகோதரர்களே சிந்தியுங்கள்?.”
என்று கொங்கையை குலுக்கி முந்தானையால் மூக்கை சிந்துகிறார் ததஜ வின் அஹமது அலி. அவர்கூறியது பொய் என்றும் நாம் கூறியதுபோல் ஜாக் மற்றும் ததஜ வினர் அங்கு தொழுதுள்ளார்கள் என்பதையும் அவரையும் அறியாமல் அடுத்த பாராவிலேயே ஒப்புக்கொண்டுள்ளதையும் காணலாம்.
“தென்காசி பகுதியை சேர்ந்த தமுமுக குண்டர்கள் ஒரு குருப்பாக வந்து ஜமாத் தொழுகை முடிந்த பின் தொழுது இருக்கிறார்கள். ஜமாத் தொழுகைக்கு பிறகு யார் வந்து தொழுதாலும் அவர்கள் கையில்தான் பள்ளி உள்ளது என்று சொல்வது முட்டால்தனமாகும். -ததஜ வின் அஹமது அலி
அது மட்டுமல்லாது நாம் கூறியது உண்மை என்று நிருபிக்கும் வகையில் ததஜவின் அதிகாரப்பூர்வ இணையத்திலும் வெளியாகயுள்ள செய்தியை கீழே தந்துள்ளோம் அதிலும் இவர்கள் ஜாக் மற்றும் தமுமுக வினர் தொழுகை நடத்தியுள்ளதை ஒத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் ஏகத்துவவாதிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இந்த கூட்டத்தினரால் நடத்தப்படும் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தில் பள்ளிக்குள் தொழுத முஸ்லிம்களையும் தொழ வைத்த ஒரு இமாமையும் குண்டர்கள் என்றும் ரவுடிகள் என்றும் எழுதியுள்ளார்கள்.
“பின்னர் அஸர் நேரத்தில் பள்ளியில் ஜமாத் முடியும் வரை வேண்டுமென்றே காத்திருந்து மாலை 4.45 மணிக்கு ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி தலைமையில் ரவுடி கும்பல் சுமார் 20 நபர்கள் பள்ளிவாசலில் நுழைந்து நீதிமன்ற உத்தரவை மீறி மைக்கை ஆன் செய்து இரண்டாவது ஜமாத் நடத்தினர். பின்னர் ரிபாய் தலைமையில் கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று பொய்யான தகவல்களைச் சொல்லி பள்ளியை மூடுவதற்குரிய முயற்சிகளை பல மணிநேரம் செய்தனர்.-tntj.net

பகிரங்கமாக இஸ்லாத்தை மீறிய செயலாகும் !! தவ்ஹித் ஜமாத் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இவர்கள் பள்ளிக்குள் தொhழுத முஸ்லிம்களையும் தொழ வைத்த ஒரு இமாமையும் குண்டர்கள் என்றும் ரவுடிகள் என்றும் கூறுவதுதான் தவ்ஹீதா?
இவ்வாறாக நாம் எழுதியது அனைத்தும் உண்மை என்று நிருபித்ததோடு ததஜ வினர் அனைவரும் பொய்யர்கள் என்ற கூற்றையும் மெய்ப்படுத்தி வருகின்றார்கள்.
இந்த பள்ளி தொடர்பான வழக்கு எம்.எஸ் சேகு உதுமான் மற்றும் வா.கொ.மசூது என்பவர்களுக்கும் ஜம்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பிற்கும் இடையில் நடந்ததாகும் இதில் ததஜ வினருக்கு என்ன வேலை ? இது ததஜ விற்கும் ஜம்யத்துல அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பிற்கும் இடையில் நடந்த விவகாரமா? அல்லது மேற்படி எம்.எஸ் சேகு உதுமான் மற்றும் வா.கொ.மசூது ஆகியோர் ததஜ வை சேர்ந்தவர்களா?
மற்றும் இந்த பள்ளி ஜம்யத்துலு; அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பிற்கு சொந்தமானதல்ல இது தமிழ்நாடு வக்ஃப்போர்டுக்கு சொந்தமானது பள்ளி மூடியிருப்பதால் தொழ முடியவில்லை பள்ளியை திறந்து தொழ அனுமதிக்க வேண்டும் என்பதுதான் வழக்கு அதற்கு ஆதாரங்களை நாம் கீழே தந்துள்ளோம்.

வணக்கமாய் கோர்டாரை பிறார்த்தித்தது
இல்லை முகவைத்தமிழன் கூறுவது பொய் என்று எழுதுவீர்களானால் அதற்குறிய ஆதாரங்களை வெளியிடுங்கள் மக்கள் தீர்மானிக்கட்டும் பொய்யன் யார் என்பதை.
நமது வாதமும் கேள்விகளும் மிகத்தெளிவாக உள்ளன மக்களும் அதை உணர்ந்துள்ளார்கள் ஆக உங்கள் தலைவன் கிரிமினல் பி.ஜே யைப்போல் “உன் பெயர் என்னவென்று கேட்டால் அந்தா ஆட்டுக்குட்டி என்றும் தொன்டிக்கு வழி சொல்லு என்று கூறினால் நான் அல்வா திங்கவே இல்லை” என்று சம்பந்தமேயில்லாமல் பதில் கூறுவதை நிறுத்திவிட்டு கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் நேரடியாக பதில் சொல்லவும் இல்லையேல் எம்மிடம் சரக்கு இல்லை நாங்கள் பொய்யர்கள் என்று ஒத்துக்கொள்ளுங்கள்.
எமது கேள்விகள் :
“இறைவனின் கிருபையால் கடையநல்லூர் முபாரக் பள்ளி அரசு ஆனைப்படி தவ்ஹித் ஜமாத்திடம் ஒப்படைப்பு இன்று மக்ரிப் முதல் தொழுகை ஆரம்பம்”
என்று பிளாஸ் நியுஸ் வுட்டதை அனைத்து சகோதரர்களும் அறிவார்கள் நீங்கள் வுட்ட பிளாஸ் நியுஸ் உண்மையானால் அரசு வெளியிட்ட ஆனையின் நகலை வெளியிடுங்கள்.
நீங்கள் கூறுவதுபேல் ததஜ விற்கும் பள்ளிக்கும் சம்பந்தம் இல்லையென்றால் , ததஜ பள்ளியில் உரிமை கோர வில்லை என்றால் இத்தனை கலோபரமும் ஏன்?
தாவா பணிகளுக்காக வசூலிக்கப்பட்ட பணத்தினை இதற்காக செலவளிப்பதும் அதிகாரப்பூர்வ இணையத்திலும் பத்திரிகைகளிலும் ததஜ இந்த ஆட்டம் போடுவதும் ஏன்?
அரசு ஆணை வெளியிடவில்லை நாம் கூறியது போல் தொழுவதற்குத்தான் வக்ஃப்போர்ட் (அரசு அல்ல) அனுமதித்துள்ளது அதுவும் ததஜ வினரை அல்ல என்றால் பிளாஸ் நியுசும் அனைத்து ஆர்ப்பாட்டங்களும் வலைகுடாவில் அடுத்த வசூலை போடுவதற்காக வேண்டி ததஜ வின் விசிலடிச்சான் குஞ்சுகளை குஷிப்படுத்துவதற்காக அடித்துவிடப்பட்டதுதான் என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா?
நாம் கூறுவது , கூறியது அனைத்தும் உண்மை என்று தக்க ஆவன ஆதாரங்களுடன் நிருபித்துள்ளோம் நீங்கள் கூறுவதுபோல் நாம் பொய்யன் என்றால் அதை ஆவன ஆதாரங்களுடன் நீருபியுங்கள்.
விரக்தியில் அண்ணனுடன் தொலைபேசியில் பேசுவதற்காகவும் அண்ணனிடம் உங்கள் பெயர் போக வேண்டும் என்பதற்காகவும் எழுதுவதை நிறுத்திவிட்டு மறுமையில் இறைவனிடம் உண்மையாளனாக நிற்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நியாயமாக நோர்மையாக உங்கள் தலைமையிடம் நாம் மேற்கூறிய கேள்விகளை கேளுங்கள் சரியான ஆதாரங்களோ முறையான பதிலோ கிடைக்காத பட்சத்தில் உங்களின் பொய்யான தலைமையை புறக்கனியுங்கள்.